தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மீக்கு மாத்ரமே செப்தா' தயாரிப்பாளரான 'ரவுடி பாய்' விஜய் தேவரகொண்டா

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது புதிய படம் ஒன்றை தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

Vijay Deverakonda

By

Published : Aug 29, 2019, 7:57 PM IST

'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கு சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' படத்தில் 'இங்கெ இங்கெ இங்கெ காவலி' பாட்டின் மூலம் இவருக்கு அதிக ரசிகைகள் கிடைக்க ஆரம்பித்தனர். 'நோட்டா' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நிற்க ஆரம்பித்தார். இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. சமீபத்தில் வெளியான 'டியர் காம்ரேட்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

இப்படி இளைஞர்களை கவரும் விதத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

விஜய் தேவரகொண்டா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு 'கிங் ஆஃப் தி ஹில்' எனப் பெயரிட்டு முதல் படமான 'மீக்கு மாத்ரமே செப்தா (MeekuMaathrameCheptha )' என்ற தலைப்பில் தயாரிக்க உள்ளார். இயக்குநர் தருண் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாமீர் சுல்தான் இயக்குகிறார். மதன் குணாதேவா ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகளும் படத்தின் கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் தருண் விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக வைத்து 'பெல்லி சூப்புலு' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details