'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகநாத் அடுத்தாக விஜய் தேவரகொண்டாவை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் விஜய் தேவரகொண்டாவின் பத்தாவது படம்.
ஷார்மி கவுர், கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தாவுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.