தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தல, தளபதி வில்லனுடன் ஸ்ருதிஹாசனின் ரொமாண்டிக் பாடல் - யாரா இந்திப் படம்

வித்யூத் ஜாம்வால் - ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கிடையேயான ஆழமான காதலை வெளிப்படுத்தும் விதமாக 'யாரா' படத்தில் இடம்பெறும் காதல் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Yaara new track out
யாரா படத்தில் வித்யூத் ஜாம்வால் - ஸ்ருதிஹாசன்

By

Published : Jul 22, 2020, 12:33 PM IST

மும்பை: ஸ்ருதிஹாசன் இந்தியில் நடித்து வரும் 'யாரா' என்ற படத்திலிருந்து ரொமாண்டிக்கான டைட்டில் ட்ராக் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டில் வெளியான பிரான்ஸ் மொழிப் படமான 'கேங்க் ஸ்டாரி' படத்தின் ரீமேக்காக 'யாரா' என்ற பெயரில் இந்தியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக வித்யூத் ஜாம்வாலும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். வித்யூத் ஜாம்வால் தமிழில் தல அஜித் நடித்த பில்லா 2, தளபதி விஜய் நடித்த துப்பாக்கி ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

சவுக்தி கேங்க் என்று அழைக்கப்படும் குற்றம் புரியும் குழுவில் இருக்கும் நான்கு நண்பர்களின் வாழ்க்கை, அவர்கள் சென்ற உச்சம் மற்றும் அடைந்த வீழச்சியை கூறும் விதமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்திலிருந்து டைட்டில் பாடலாக 'பிஹேதி' என்று தொடங்கும் 2 நிமிட வீடியோவை நடிகர் வித்யூத் ஜாம்வால் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

படத்தின் பிரதான கதாபாத்திரங்களான வித்யூத் ஜாம்வால், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கிடையேயான ஆழமான காதலை, பாடலில் காட்சிகளாக காட்டியுள்ளனர். மிகவும் ரொமாண்டிக்காக அமைந்துள்ள இந்தப் பாடலில் வித்யூத் - ஸ்ருதி ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். அங்கித் திவாரி இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடலை, பாடகி ஐஸ்வர்யா மஜூம்தரும் இணைந்து பாடியுள்ளார்.

இதையும் படிங்க:யூடியூப் சேனல் தொடங்கிய நடிகை ஸ்ருதி ஹாசன்!

இந்தப் படம் குறித்து வித்யூத் ஜாம்வால் கூறியதாவது:

நண்பர்களைப் பற்றிய இந்தக் கதையானது நாம் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் பல விஷயங்களை கொண்டதாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு கதாபாத்திரங்களில் ஏதாவது ஒன்றை ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையோடு பொருந்தி பார்க்கும் விதமாக இருக்கும். எனது கதாபாத்திரம் திருப்பம் நிறைந்ததாக இருக்கும். ரசிகர்களை இதை தவறாமல் பார்க்க வேண்டும் என்றார்.

நடிகை ஸ்ருதிஹாசன் படம் குறித்து கூறியதாவது:

யாரா கதை சொல்லப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெறும் நான்கு நண்பர்களுக்கிடையே திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. படத்தில் ஒரே பெண் பிரதான கேரக்டரில் தோன்றவுள்ளேன் என்றார்.

க்ரைம் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை திக்மன்ஷூ துலியா இயக்கியுள்ளார். கரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், இப்படமானது ஸூ5 தளத்தில் நேரடியாக ஜூலை 30ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க: தண்ணீரில் நடக்கும் வித்தையை என் யூடியூப் சேனலில் பாருங்க

ABOUT THE AUTHOR

...view details