தமிழ்நாடு

tamil nadu

பெண்களின் போராட்ட குணத்தை பிரதிபலிக்கும் 'கன்னித்தீவு'

By

Published : Aug 5, 2021, 10:49 PM IST

வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள 'கன்னித்தீவு' திரைப்படம் பெண்களின் போராட்ட குணத்தை பிரதிபலிக்கும் என அப்படத்தின் இயக்குநர் சுந்தர் பாலு தெரிவித்துள்ளார்.

varalaxmi
varalaxmi

சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், அஷ்னா, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கன்னித்தீவு’.

கிருத்திகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அரோல் கொரலி இசையமைக்க, சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

கன்னித்தீவு

இதில் பிரமாண்டமான ஏரியில் 9 அடி நீளமுள்ள முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து மோதுகின்றனர்.

தமிழ்மக்கள் மத்தியில் பிரபலமானது 'கன்னித்தீவு'

இப்படம் குறித்து இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், 'கன்னித்தீவு' என்ற பெயர் தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம்.

கன்னித்தீவு

படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம்.

வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை.

சமூக அக்கறை கொண்ட பெண்கள்

சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள்.

உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

கன்னித்தீவு

அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள்.

அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாக்கியுள்ளதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார்.

கன்னித்தீவு

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட்டுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்த பின்னர் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பிரம்மாண்ட முதலையுடன் மோதும் வரலட்சுமி!

ABOUT THE AUTHOR

...view details