நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் மாதம், பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர்கள் கரோனா ஊரடங்கு மத்தியில் கோவாவிற்கு சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஒரு வீட்டை உடைத்தேன் என்று நினைப்பவர்களுக்கு. பல ஆண்டுகளாக வீடு மற்றும் குடும்பம் இல்லாத ஒருவருடன் நான் ஒரு வீட்டை உருவாக்கினேன், அவர் வேதனையடைந்தார். நானும் அப்படித்தான் இருந்தேன். எதுவும் நம்மை உடைக்க முடியாது என்று நான் நம்பினேன்.
ஆனால் அவருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அவரை இழந்து விடுவேனோ என்று பயம் தோன்றியது. நான் இப்போது ஒரு பெரிய சவாலை சந்தித்துள்ளேன். அதை சரிசெய்ய முயற்சி செய்து வருகிறேன்.