தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 13, 2021, 11:49 AM IST

ETV Bharat / sitara

கலைஞருக்கு மலர்; திருவள்ளுவருக்கு மாலை: மரியாதை செலுத்திய வைரமுத்து

கவிஞர் வைரமுத்து தனது 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவர் கலைஞர் நினைவிடத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

Vairamuthu
Vairamuthu

தமிழ்த்திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணிப் பாடலாசிரியராகத் திகழும் கவிஞர் வைரமுத்து, தனது 68ஆவது பிறந்த நாளை இன்று (ஜூலை 13) கொண்டாடுகிறார்.

இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வைரமுத்து கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்த் தூவியும், அதன் பின் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று என் பிறந்த நாள். கலைஞர் நினைவிடத்தில் மலர் பெய்தேன். வள்ளுவர் சிலைக்கு மாலை சூட்டினேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஒன்றியம் என்பதில் என்ன பிழை? - ட்விட்டரில் கேள்வி எழுப்பிய வைரமுத்து!

ABOUT THE AUTHOR

...view details