எம்.ஜி.ஆர்., மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது தாக்கம் அரசியல், சினிமா களத்தில் இருக்கிறது. அதனடிப்படையில் எம்ஜிஆர் உழவனாக நடித்த 'உழைக்கும் கரங்கள்' படத்தைப் போல உழவர் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.
’உழைக்கும் கைகள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் எம்ஜிஆராக, நாமக்கல் எம்ஜிஆர் நடித்துள்ளார். எம்ஜிஆர் வேடமிட்டு பல்வேறு மேடைகளில் தோன்றியுள்ள இவருக்கு, ஜோடியாக கிரண்மயி நடித்துள்ளார்.
மேலும் ஜாக்குவார் தங்கம், பிரேம்நாத் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜயகாந்தை வைத்து 'பூந்தோட்ட காவல்காரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய செந்தில்நாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.