தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் - ஆர்.வி.உதயகுமார் - கோவிட்-19

கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்று ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் - ஆர்.வி.உதயகுமார்
கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் - ஆர்.வி.உதயகுமார்

By

Published : Mar 21, 2020, 11:06 PM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக நாளை பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என மோடி வேண்டுகோள்விடுத்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு கோவிட்-19 குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர். வி. உதயகுமார் கோவிட்-19 குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையின் அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருந்தபடியே மக்கள் ஊரடங்கு உத்தரவு என்ற சுயக்கட்டுப்பாட்டை அறிவித்துள்ளார்.

நன்றி செலுத்த வேண்டும் ஆர்.வி.உதயகுமார் வேண்டுகோள்!

அதை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த கரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க பல விதமான நடவடிக்கைகளை எடுக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இதையொட்டி மக்கள் அனைவரும் நாளை இரவு 7 மணிக்கு வீட்டிலிருந்தபடியே கைகளை தட்டி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:ராகவா லரன்ஸுடன் இணையும் 'மான்ஸ்டர்' நாயகி?

ABOUT THE AUTHOR

...view details