கொரிய இயக்குநர் யன் சேங் ஹோ இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'ட்ரைன் டூ பூசான்'. ஜாம்பி த்ரில்லர் வகையான இந்தத் திரைப்படம் உலக அளவில் பெரும் வெற்றிபெற்றது.
தற்போது இந்தப் படத்தின் தொடர்ச்சியாக 'பெனின்சுலா' (Peninsula) என்ற திரைப்படம் ஜூலை மாதம் தென் கொரியாவில் வெளியானது. அப்போது உலகெங்கும் கரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால் இந்தத் திரைப்படத்தை மீண்டும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நவம்பர் 27ஆம் தேதி இந்தியாவில் 'பெனின்சுலா' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் யன் சேங் ஹோ, "ஆக்ஷன், உணர்வுகள் கலந்த கலவையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர் கேங் டான் - வோன் மட்டுமே நடிக்கக்கூடிய வகையில் ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளோம். பார்வையாளர்களை மூழ்கடிக்கக்கூடிய உணர்ச்சிகளை அவர் தன் கண்களாலேயே வெளிப்படுத்தியுள்ளார்" என கூறினார்.