வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் திரைப்படம் 'மாநாடு'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஊரடங்கு தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது பெரும்பாலான படங்களின் அப்டேட்கள் வெளிவந்த நிலையில், மாநாடு படத்தின் அப்டேட் வர வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.