சென்னை:பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத் துறையில் முன்னேறியுள்ளது குறித்து நடிகை மீராமிதுன் அவதூறாக ஒரு காணொலியில் பேசியிருந்தார், அந்தக் காணொலியை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தில் கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்குப்பதிந்து மீராமிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.
இதற்கிடையில் இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்தது. அதன் நகல்களைக் கொடுப்பதற்காக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
மிஸ்ஸான மீராமிதுன்