தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஈழ பின்னணி திரைப்படம்: 'சினம் கொள்’ தணிக்கையில் புதிய சாதனை

ஈழ பின்னணியில் உருவாகி உள்ள 'சினம் கொள்' திரைப்படம் தணிக்கையில் புதிய சாதனையை படைத்துள்ளது.

By

Published : May 18, 2019, 4:50 PM IST

poster

தமிழ் சினிமாவில் எத்தனையே படங்கள் ஈழத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளன. அப்படி உருவாகும் படங்களில் போர் காட்சிகள், இரத்தக்களரி, அழுத்தமான வசனங்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் அந்த காட்சிகளை வெட்டி , வசனங்கள் ஒலியிழப்பு செய்ய தணிக்கை குழு வலியுறுத்தும்.

சினம் கொள்

ஆனால் முதன் முதறையாக கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள சினம் கொள் திரைப்படம் தணிக்கையில் இந்த தடையை உடைத்து 'யு' சான்றிதழை பெற்றுள்ளது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜோசஃப் கூறுகையில், இப்படத்திற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற இடங்களில் முற்றிலும் படம்பிடிக்க நாங்கள் முடிவு செய்தோம். அப்போதுதான் ரசிகர்கள் அந்த தளத்திற்கு நெருக்கமாக அனுபவத்தை உணர முடியும்.

சினம் கொள்

இதற்காக 78 பேர் கொண்ட மொத்த படக்குழுவும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு சென்றோம். உண்மையில், சில தொழில்நுட்ப கலைஞர்கள் சிங்களர்களாக இருந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். இத்தகைய விஷயங்கள் இந்த படத்திற்கு ஒரு வரம்.

போருக்குப் பிறகான இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஒரு நபர் அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள்.

இந்த சினம் கொள் திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருக்கிறது என்று கூறினார்.

சினம் கொள்

மேலும் இப்படத்திற்கு ஐரோப்பா, கனடா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் நிதி அளித்துள்ளனர். தேசிய விருதுக்கான பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details