இந்தியா அளவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் 'கே.ஜி.எஃப்.'. அதுமட்டுமல்லாது இந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளையும் வாங்கியது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. இந்த பிரமாண்ட படத்தை ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பிரமாண்ட இயக்குநர்... பிரமாண்ட நாயகனுடன் இணைந்த 'சலார்' ஷ்ருதி! - ஷ்ருதி ஹாசனின் படங்கள்
பிரபாஸின் புதிய படமான 'சலார்' படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்.
![பிரமாண்ட இயக்குநர்... பிரமாண்ட நாயகனுடன் இணைந்த 'சலார்' ஷ்ருதி! Shruti Haasan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10408473-842-10408473-1611819138893.jpg)
இந்த நிலையில், ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தையும் ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்தியத் திரையுலகில், 'கே.ஜி.எஃப். சேப்டர் 1', 'கே.ஜி.எஃப். சேப்டர் 2', 'சலார்' ஆகிய மூன்று திரைப்படங்களையும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட்ட நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.