சென்னை: சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீ கடந்த 2019ஆம் ஆண்டு கணவர் ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், காவல்துறையினர் ஈஸ்வரை கைது செய்தனர். கைதுக்கு பின் ஈஸ்வர் பிணையில் வெளிவந்தார். இதையடுத்து ஈஸ்வரும், ஜெயஸ்ரீயும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஈஸ்வர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , "ஜெயஸ்ரீ தங்களது அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவர் ராகவேஷ் என்பவருடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
அவர்கள் ஒன்றாக இருந்து வருவது ராகவேஷின் தந்தையான சண்முகத்திற்கு பிடிக்கவில்லை. தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளரான சண்முகம் தனது மகனை விட்டு ஜெயஸ்ரீ பிரிந்து செல்ல வேண்டும் என தன்னிடம் கூறியுள்ளார்.