2014ஆம் ஆண்டு பிரதீப் சர்கார் இயக்கத்தில் ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘மர்தானி (Mardaani). இதில் சிறுமிகளைக் கடத்தும் மாஃபியா தலைவனை எதிர்க்கும் காவல் துறை கண்காணிப்பாளர் சிவானி சிவாஜி ராய் கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. ராணி முகர்ஜி தனது தைரியமான நடிப்புக்காக ஸ்டார் டஸ்ட் விருதுபெற்றார். இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகமான ‘மர்தானி 2’ உருவாகியுள்ளது.
‘மர்தானி 2’ ட்ரெய்லர் - மீண்டும் வருகிறாள் சிவானி சிவாஜி ராய்! - Mardaani
ராணி முகர்ஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘மர்தானி 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
![‘மர்தானி 2’ ட்ரெய்லர் - மீண்டும் வருகிறாள் சிவானி சிவாஜி ராய்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5062183-999-5062183-1573730124286.jpg)
தற்போது ‘மர்தானி’ ட்ரெய்லர் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மர்தானி’ முதலாம் பாகத்தை எழுதிய கோபி புத்ரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் வில்லனின் கதாபாத்திரம் மிகக் கொடூரமாக இருக்கும் என கூறப்படுகிறது. பெண்களை டார்கெட் செய்யும் கொடூர சைக்கோ கதாபாத்திரத்தை ஹேண்டில் செய்யும் போலீஸாக ராணி முகர்ஜி மிரட்டப் போகிறார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி முகர்ஜியின் கணவர் ஆதித்யா சோப்ரா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஃப்ரோசன் 2' பத்திரிக்கையாளர் சந்திப்பு!