’பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் தொடங்கவுள்ளது. ரஜினியுடன் முதன்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்திருப்பதால் அனைவரிடமும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனையடுத்து, ’தலைவர் 167’ என பெயரிடப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரஜினி மற்றும் முருகதாஸ் ரசிகர்களிடையே இருந்துவந்தது.