தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 29, 2020, 6:00 PM IST

ETV Bharat / sitara

தர்பார் 50ஆவது நாள்: பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய ரஜினி ரசிகர்கள்

குமரி: 'தர்பார்' திரைப்படம் வெளியாகி 50 நாள்கள் கடந்த நிலையில், அதனை ரஜினி ரசிகர்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து அசத்திய ரஜினி ரசிகர்கள்
பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து அசத்திய ரஜினி ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ’தர்பார்’. நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற தர்பார் படம் ரூ.200 கோடி மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதைப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று வரை உறுதிசெய்யவில்லை. இதனிடையே, 'தர்பார்' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 50 நாள்கள் ஆகியுள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில், குமரி மாவட்டத்திலுள்ள ரஜினி ரசிகர்கள் வசந்தம் திரையரங்கில் தர்பார் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள், இனிப்புகள் ஆகியவற்றை வழங்கினர்.

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து அசத்திய ரஜினி ரசிகர்கள்

அதுமட்டுமின்றி திரையரங்கு ஊழியர்களுக்கு அரிசி, வீட்டிற்குத் தேவையான இதர பொருள்களையும் பரிசாக வழங்கினர்.

இதையும் படிங்க:'ஆர்டிகல் 21' ஃபர்ஸ்ட் லுக்: மது...சிகரெட்டுடன் தனுஷ் பட நடிகை!

ABOUT THE AUTHOR

...view details