தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் 2020-2022ஆம் ஆண்டிற்கான தேர்தல் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் டி. ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் தேனப்பன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.
இவர்களைத் தவிர தயாரிப்பாளர் விஜய சேகர் தலைமையில் ஓயாத அலைகள் என்று நான்காவது அணியும் போட்டியிடுகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் விஜயசேகர் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "வருடத்திற்கு 150 தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சுமார் 500 முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
தயாரிப்பாளர்கள் அனைவரும் தனித்துவிடப்பட்ட நிலையில் தனித்தாளும் சூழ்ச்சியால் தனியாகப் பிரிந்திருந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் ஆயிரத்து 303 தயாரிப்பாளர்கள் வாக்களிக்கக் கூடிய தகுதியானவர்களாக உள்ளனர்.
ஆயிரம் தயாரிப்பாளர்கள் சிறு, நடுத்தர படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஆவர். இவர்கள்தான் 99 விழுக்காடு பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் பிரச்னையை கேட்பதற்கு இங்கு ஆளில்லை. தேர்தல் வந்துவிட்டால் சிறு படத் தயாரிப்பாளர்களை நலம் காப்போம் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர்.