தமிழ்நாடு

tamil nadu

மனசுல என்னமோ ரோஹித் சர்மா நினைப்பு...'ஆடு ஜீவிதம்' பிரித்விராஜ்

By

Published : Jun 15, 2020, 2:21 PM IST

'ஆடு ஜீவிதம்' படப்பிடிப்பிற்கு இடையில் பிரித்விராஜ் கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரித்விராஜ்
பிரித்விராஜ்

இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் தற்போது 'ஆடுஜீவிதம்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்காக 20 கிலோ எடை குறைந்து, அதிக தாடியுடன் காணப்படுகிறார் பிரித்விராஜ்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டன் நாட்டில் உள்ள பாலைவனப் பகுதிகளில் நடைபெற்றது. உலகப் பெருந்தொற்றான கரோனா காரணமாக அங்கு பல இன்னல்களை சந்தித்து இறுதியாக பிரித்விராஜ் உட்பட படக்ககுழுவினர் மே 22ஆம் தேதி கொச்சி திரும்பினர்.

பின் அவர்கள் தனிமைப்படுத்துதல் மையத்தில் தங்க வைக்கப்பட்டு வீடு திரும்பினார். இதனையடுத்து பிரித்விராஜ் தனது சமூக வலைதளத்தில், ஜோர்டன் நாட்டில் படப்பிடிப்பின் இடையில் கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நீங்கள் ரோஹித் சர்மா என்று நினைத்து ஒரு புல் ஷாட்டை எதிர் பார்க்கையில் ​​அதற்கு பதிலாக ஷார்ட் மிட் விக்கெட்டில் சிக்கிக் கொள்ளும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகமாக லைக் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஆடுஜீவிதம் படத்திற்காக வளர்க்கப்பட்ட தாடியை சமீபத்தில் கிளீன் ஷேவ் செய்து தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: வீட்டிலேயே காய்கறி செடிகள் வளர்க்கும் சமந்தா!

ABOUT THE AUTHOR

...view details