தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

OTT ரிலீஸ் வேறு... தியேட்டர் ரிலீஸ் வேறு - தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு

தியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுப்பது தயாரிப்பாளர்கள் மட்டும் தான்; இருவரின் இந்தப் பிணைப்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும் எனத் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கருத்துத் தெரிவித்துள்ளார்.

By

Published : May 18, 2020, 2:50 PM IST

Prabhu
Prabhu

கரோனா தொற்று காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால், அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கியுள்ளன. இதனால் சிலப்படக்குழுவினர் டிஜிட்டல் தளமான OTTயில் வெளியிட சம்மதம் தெரிவித்து, விரைவில் படங்கள் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளன.

தமிழில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வருகிற மே 29ஆம் தேதியும், கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' திரைப்படம் ஜூன் 19ஆம் தேதியும் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு ஆதரவு தெரிவித்தது.

இதனையடுத்து 'கைதி' திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "OTT & தியேட்டர் ரிலீஸ் என்பது வெவ்வேறு வழிகள். இது பற்றி வருத்தப்பட வேண்டுமென்றால், அது நாடகமற்ற பிரிவு தான். தியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுப்பது தயாரிப்பாளர்கள் மட்டும் தான். இருவரின் இந்தப் பிணைப்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதனால், இந்த கரோனா பிரச்னையில் இருந்து மீண்டு வந்து மீண்டும் தொடங்குவோம். அறிக்கைப் போர் வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'ஒற்றுமையுடன் இருப்போம்... நல்லதே நடக்கும்' - பிகில் தயாரிப்பாளர்

ABOUT THE AUTHOR

...view details