தமிழ்நாடு

tamil nadu

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து சுஷாந்திற்காக பிரார்த்தனை!

By

Published : Aug 17, 2020, 8:52 PM IST

சுஷாந்த் சிங்கிற்காக உலக அளவில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுஷாந்த்
சுஷாந்த்

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்தின் மரணம் தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று முன் தினம் சுதந்திர தினத்தன்று, சுஷாந்த் சுங்கிற்காகத் தேசிய அளவில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக அவரது தங்கை ஸ்வேதா சிங் கிர்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலக அளவில் சுஷாந்த் சிங்கிற்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பிரார்த்தனை செய்தனர். எங்கள் பிரார்த்தனைக்கு நிச்சயம் விடை கிடைக்காமல் போகாது" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details