நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கடந்த 9ஆம் தேதி, 3 கோடி ரூபாயை கரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அளிப்பதாக அறிவித்திருந்தார். இதில் தமிழ்நாடு அரசுக்கு 50 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளுக்கு 7.4.2020 முதல் 13.4.2020 வரை 10 நாட்களில் நிவாரணத் தொகை வழங்கியவர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ராகவா லாரன்ஸின் பெயர் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு அரசு, இதுவரை கரோனா தடுப்பு நிதியாக 134 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும்; அந்த நிதியைக் கொடுத்தவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பட்டியலில் நடிகர் அஜித்குமார் 50 லட்சமும், சிவகார்த்திகேயன் 25 லட்சமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கோடியும் தந்ததாக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ராகவா லாரன்ஸ் அறிவித்த 50 லட்சம் ரூபாய் குறித்த எந்தத் தகவலும் இந்தப் பட்டியலில் இல்லை. இதனால், ராகவா லாரன்ஸ் உண்மையிலேயே பணம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.