தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நயன்தாராவின் தடுப்பூசி: சர்ச்சையும், விளக்கமும்! - தடுப்பூசி சர்ச்சை

தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், வெளியான புகைப்படம் விழிப்புணர்வுக்காக பகிரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Nayanthara Clarification about vaccinated
Nayanthara Clarification about vaccinated

By

Published : May 20, 2021, 5:18 PM IST

சென்னை: நடிகை நயன்தாரா, செவ்வாய்க்கிழமை (மே 18) இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அதில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், செவிலியர் கையில் தடுப்பூசியே போடவில்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் நெட்டிசன்கள் புகைப்படத்தை வைரலாக்கி, மீம்ஸ்களால் பந்தாடினர்.

'தயவு செய்து ஊசி போட்டுக்கோங்க...': நடிகை நயன்தாரா

இச்சூழலில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் விழிப்புணர்வுக்காக பகிரப்பட்டதாகவும், அதுவும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அன்றே எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details