அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த 'A1' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் 'டகால்டி', ஆனந்த் பால்கி இயக்கத்தில் 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரு படங்களின் வெளியீட்டுக்கும் சந்தானம் காத்திருக்கிறார். இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவும் சந்தானம் செம குஷியில் உள்ளாராம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு, தாமதமாகி வரும் ஜனவரி 31ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.