தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹிப்ஹாப் ஆதி விஜய் மாதிரி இருக்காரு - இயக்குநர் கே.எஸ் ரவிகுமார்

ஆதியைப் பார்க்கும்போது விஜயைப் பார்ப்பதுபோல இருக்கிறது என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 19, 2020, 7:49 PM IST

Ks.ravikumar
Ks.ravikumar

இயக்குநர் சுந்தர் சி தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, ஹிப்ஹாப் ஆதி நடித்து கடந்த வாரம் வெளியான படம் நான் சிரித்தால். துன்பம் வரும் நேரத்திலும் சிரிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆதி நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த இயக்குநர் கே.எஸ் ரவிகுமார் கலந்துகொண்டு பேசுகையில், சுந்தர்.சி தயாரிப்பில் ‘தலைநகரம்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது இரண்டாவது படம். சுந்தர்.சி என்னிடம் ‘கெக்க பெக்க’ குறும்படத்தை பார்க்க சொன்னார். பார்த்ததும் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன்.

அது இக்குறும்படத்தில் இல்லை. ஆனால், நாங்கள் ‘டில்லி பாபு’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். நான்தான் வில்லனா? என்றேன். இல்லை. ஆதி கதாநாயகன், அவருடைய சிரிப்புதான் வில்லன்.

இயக்குநர் கே.எஸ் ரவிகுமார்

இந்த கதாபாத்திரத்தை போல நிஜ வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன். நான் சில காட்சிகளில் சில யோசனைகள் இயக்குநர் ராணாவிற்கு கூறுவேன். சிலவற்றை கேட்டுக் கொள்வார். சிலவற்றுக்கு அது இந்த இடத்திற்கு பொருந்தாது என்று கூறுவார்.

ராணா இப்படத்துடன் நிற்காமல் விரைந்து அடுத்தடுத்து படங்கள் இயக்க வேண்டும். ஆதியைப் பார்க்கும்போது விஜயைப் பார்ப்பதுபோல இருக்கிறது. புதுமுக இயக்குநர்களுடன் 9 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால், நடிப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று இருக்கும் இளைஞர்கள் இரவில் தான் பணியாற்றுகிறார்கள் என்றார்.

இதையும் வாசிங்க:'சினிமாவில் சம்பாதிக்க காத்திருப்பு மிக அவசியம்' - மிஷ்கின்

ABOUT THE AUTHOR

...view details