மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், அண்மையில் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது வி.எஸ். ரோகித் இயக்கத்தில் 'களா' (Kala) என்னும் படத்தில் நடித்துவந்தார்.
இப்படத்தின் சண்டைக் காட்சியின்போது டொவினோ தாமஸிற்கு வயிற்றுப் பகுதியில் அடிபட்டது. அதனால் அவர் அக்.7ஆம் தேதி சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார்.