தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

படப்பிடிப்பு ரத்து: ஓவியம் வரைந்து நேரத்தை செலவிடும் மஹிமா நம்பியார் - corona virus

நடிகை மஹிமா படப்பிடிப்பு இல்லமால் வீட்டில் முடங்கி இருப்பதால், ஓவியம் வரைந்து தனது நேரத்தை கழித்துவருகிறார்.

ஓவியம் வரைந்து நேரத்தை செலவிடும் மஹிமா நம்பியார்
ஓவியம் வரைந்து நேரத்தை செலவிடும் மஹிமா நம்பியார்

By

Published : Mar 29, 2020, 10:58 AM IST

கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அலுவலகங்களும், கடைகளும் மூடப்பட்ட நிலையில், அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக ஓய்வின்றி , கடிகாரத்தைப் போல் சுற்றித் திரிந்த பிரபலங்கள் தற்போது இதனால் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வீட்டில் முடங்கியுள்ள கதாநாயகிகள், சிறிய வீட்டு வேலைகள், சமையல், ஓவியங்கள் வரைவது போன்ற வேளைகளில் தங்களை ஈடுபடுத்திவருகின்றனர். அந்தவகையில் 'மாகமுனி' பட நடிகை மஹிமா நம்பியார் தற்போது தனது வீட்டில் உள்ள சுவரில் ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், "தனிமைப்படுத்திக் கொள்வதைப் பயன்படுத்தி, இந்த நேரத்தில் எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார். நீங்களும் ஓவியராக மாற உங்களுக்கு தேவை ஒரு சுவர், ஒரு பென்சில், உங்கள் திறமையைப் பாராட்டுவதற்கு ஒரு அம்மா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் சாட்டை, குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், மகாமுனி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள, மஹிமா நம்பியார் தற்போது ஐங்கரன், அசுரகுரு, கிட்னா உள்பட ஒருசில படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேசிய ஊரடங்கு உத்தரவு: தினக்கூலித்தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் 'மாஸ்' பிரணிதா

ABOUT THE AUTHOR

...view details