இயக்குநர் ராஜமௌலி தனது அடுத்தப் படமான RRR படத்தில் பிஸியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் நடிகர் மகேஷ் பாபுவை, தனது அடுத்தப் படத்தில் நடிக்க வைக்கவுள்ளதாக தகவல் கசிந்துகொண்டிருந்தது.
இதையடுத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஒரு பேட்டியில் தனது அடுத்தப் படத்தை மகேஷ் பாபுவை வைத்து இயக்கவுள்ளதாக ராஜமௌலி பதில் அளித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் அந்தத் திரைப்படத்தை கே. எல். நாரயணா தயாரிப்பதாகவும் தெரிவித்தார்.