இது குறித்து நடிகர் அஜித் குமாரின் சட்ட ஆலோசகர் எம்.எஸ். பரத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் அஜித் குமார் சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் (அஜித் குமார்) அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் அவரது கவனத்துக்கு வந்துள்ளன.
இதையொட்டி, என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகார புர்வமாக அறிவிக்கிறார்