தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 22, 2021, 10:05 PM IST

Updated : Aug 22, 2021, 10:36 PM IST

ETV Bharat / sitara

'காஞ்சனா 3' பட நடிகை தூக்கிட்டுத் தற்கொலை?

’காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்த நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சனா 3 பட நடிகை தூக்கிட்டு தற்கொலை
காஞ்சனா 3 பட நடிகை தூக்கிட்டு தற்கொலை

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்ஸாண்ட்ரா ஜாவி என நான்கு நாயகிகள் நடித்து இருந்தனர்.

இதில் அலெக்ஸாண்ட்ரா ஜாவி என்பவர் ரோஸி எனும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரில் நடித்ததால், அவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன.

அலெக்ஸாண்ட்ரா ஜாவி

காதலர் பிரிந்துவிட்டதாகத் தகவல்

இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஜாவி தனது காதலருடன் கோவாவில் தங்கியிருந்தார். திடீரென காதலர் இவரை விட்டு பிரிந்து விட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

காஞ்சனா 3 பட நடிகை தூக்கிட்டு தற்கொலை

அலெக்ஸாண்ட்ரா ஜாவி தூக்கிட்டு தற்கொலை?

இதையடுத்து திடீரென நேற்று (ஆக.21) இரவு அவர் தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தற்போது காவல்துறையினர் அவருடைய சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அவரது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சனா 3 பட நடிகை தூக்கிட்டுத் தற்கொலை

இதையும் படிங்க:பாக்ஸிங்கில் ஆர்வம் கொண்ட ஸ்ருதிஹாசன் - Viral Vedio

Last Updated : Aug 22, 2021, 10:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details