சாவித்திரி 1935 டிசம்பர் 6 அன்று பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியவற்றில் முத்திரை பதித்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.
சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். இவர் சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை, நடனம் பயின்றார். இளம்வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். நவரசங்களையும் விழியோரத்தில் நிறுத்தி, உதட்டசைவால் அனைவரையும் ஆக்கிரமித்து, நடிகையர் திலகம் என்ற பட்டப் பெயரோடு பவனிவந்தவர் இவர்.
பாசமலர்
1961ஆம் ஆண்டு மே 27 அன்று 'பாசமலர்' திரைப்படம் வெளியானது. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இன்றுவரையில் ரசிகர்களிடையே பாசம் குறையாமல் உள்ளது. சிவாஜி கணேசன், சாவித்திரி இருவரும் போட்டி போட்டு நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கலங்கவைத்தனர்.
இந்தப் படத்துக்கு பிறகு எத்தனையோ அண்ணன், தங்கை சென்டிமென்ட் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பாசமலர் படத்தைத் தாண்டிய படம் வெளியாகவில்லை. இன்று வரையில் அண்ணன்-தங்கை பாசம் என்று சொல்லும்போது அடுத்தகணமே நம் நினைவில வந்து நிற்பது பாசமலர் திரைப்படம். நம் வீட்டிலோ பொது இடத்திலேயோ யாராவது தங்கையைத் திட்டினால் உடனே அண்ணன் கோபப்படும்போது, அங்கிருக்கும் சிலர், 'ஆமா இவங்க பெரிய பாசமலர் சிவாஜி-சாவித்திரி' என்று சொல்ல கேட்டிருப்போம். அந்த அளவிற்கு இப்படத்தில் சிவாஜியும், சாவித்திரியும் நடிக்காமல் உணர்வுப்பூர்மாக வாழ்ந்திருப்பர்.
கோமாவில் சாவித்திரி