தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகராக வலம்வருபவர் ஹரீஷ் கல்யாண். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை ஏழை, எளிய மக்களுக்குச் செய்துவருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஹரீஷ் கல்யாண் புற்றுநோயால் கைவிடப்பட்டவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களை இறுதி நிமிடம் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்றுநோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்க்கு பாராட்டுகள்.