தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊரடங்கில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் 'கொரோனா குமார்' - corona kumar movie directed by gokul

கரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து 'கொரோனா குமார்' என்ற திரைப்படத்தை இயக்குநர் கோகுல் இயக்க உள்ளார்.

gokul to direct corona kumar based on lockdown sequences
gokul to direct corona kumar based on lockdown sequences

By

Published : Jun 18, 2020, 9:32 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவும் காலகட்டத்தில்தான் ஒருவருக்கொருவர் தரும் அன்பும், ஆதரவும் நமக்கு, நம் குடும்பத்தினருக்கு, சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணரத் தொடங்கியுள்ளோம். பலருடைய வாழ்க்கையில் இந்தக் கரோனா தீநுண்மி பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயங்களை மையப்படுத்தி இயக்குநர் கோகுல் புதிய நகைச்சுவைப் படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்தப் படத்துக்கு “கொரோனா குமார்” என்று பெயரிட்டுள்ளார்.

'ரெளத்திரம்', 'காஷ்மோரா', 'ஜுங்கா' ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹெலன்‘ தமிழ் ரீமேக்கை இயக்கிவருகிறார். கோகுலின் அடுத்தப் படமாக 'கொரோனா குமார்' திரைப்படம் உருவாகவுள்ளது.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் 'குமுதா ஹேப்பி அண்ணாச்சி', 'மச்சி லவ் மேட்டர் பீல் ஆய்டாப்ள' போன்ற காமெடி வசனங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து தனக்கென தனி முத்திரை பதித்தார் இயக்குநர் கோகுல்.

அதே பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே பின்னணியாகக் கொண்டு 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் உள்ள சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக உள்ளது.

இது குறித்து இயக்குநர் கோகுல் கூறுகையில், 'சினிமாவாலா பிக்சர்ஸ் தயாரிப்பில் காமெடி, சுவாரஷியம் கலந்து இந்தத் திரைப்படம் உள்ளது. இந்தப் படம் நல்லதொரு சமூக கருத்துள்ளதாக இருக்கும்.

இந்தக் கரோனா ஊரடங்கு காலத்தில் நாம் எங்கு சென்றாலும் தொற்று குறித்த பயத்தை உணர்கிறோம். கரோனா தீநுண்மி என்பது ஒரு தொற்றுதான். ஆனால், அந்த கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியால் நமது மக்களுக்குள்ளேயே சில தவறான புரிந்துணர்வும் வரத் தொடங்கிவிட்டது.

அந்தக் கிருமித் தொற்றுக்காக நம்முடைய மனிதத்தை எங்கும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது. இந்த மாதிரியான சம்பவங்களை எல்லாம் வைத்துத்தான் முழுக்க காமெடியாக சமூகக் கருத்துடன் 'கொரோனா குமார்' உருவாகிறது.

இந்தத் திரைப்படம் ஹாலிவுட் அளவில் புகழ்பெற்ற ஸ்பின் ஆஃப் (SPINOFF) ஜானரில் உருவாகும் முதல் தமிழ் திரைப்படம். ஒட்டுமொத்த படமும் ஊரடங்கு, தனிமை காலங்களில் நடைபெறுகிறது. விரைவில் படக்குழு குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க...கரோனா மனித இனத்திற்கு ஓரு நினைவூட்டல் - 'நீயே பிரபஞ்சம்' தன்ராஜ் மாணிக்கம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details