மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள்களில், நான்கு உயிர்களைக் காவு வாங்கிய கரோனா! - கரோனா வைரஸ்
மதுரை மாவட்டத்தில், கடந்த இரண்டு நாள்களில், நான்கு பேர் கரோனா வைரஸால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
![இரண்டு நாள்களில், நான்கு உயிர்களைக் காவு வாங்கிய கரோனா! மதுரை அரசு மருத்துவமனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:21:23:1593085883-tn-mdu-04-corona-death-grh-script-7208110-25062020171638-2506f-1593085598-479.jpg)
மதுரை அரசு மருத்துவமனை
இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று (ஜூன் 25) மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அம்மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம், இன்று (ஜூன் 25) 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 4 பேர் கரோனாவால் மதுரை மாவட்டத்தில் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Jun 25, 2020, 7:56 PM IST