தமிழில் 'தளபதி', 'ரோஜா', 'இருவர்' உள்ளிட்டப் பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், சந்தோஷ் சிவன்.
இவரது தந்தை சிவன் மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். 1972ஆம் ஆண்டு வெளியான 'சொப்ணம்' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குநராக இவர் அறிமுகமானார்.
தொடர்ந்து யாகம், கொச்சு கொச்சு மோகங்கள், ஒரு யாத்ரா, அபயம் உள்ளிட்டப் பல படங்களை இயக்கியுள்ளார்.
அரசின் முதல் பத்திரிகை புகைப்படக்காரரும், கேரள சினிமாவின் பிரபல புகைப்படக் கலைஞருமான இவர், இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.