முதல் முதலாக ‘துப்பறிவாளன்’ திரைப்படத்துக்காக இயக்குநர் மிஷ்கினும் நடிகர் விஷாலும் ஒன்றாக பணியாற்றினர். அந்தத் திரைப்படம் ஹிட் அடித்து இரண்டாம் பாகம் எடுக்கும் வேலைகளும் தொடர்ந்தன. ஆனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகத்தில் இருந்து மிஷ்கின் வெளியேறினார். இதன்பின்னர் படத்தை தான் இயக்குவதாக விஷால் அறிவித்தார்.
அண்மையில் ஒரு நேர்காணலில், விஷாலை மேடையில் ஏன் திட்டினார் என்பது குறித்து மிஷ்கினிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
அப்போது இருவருக்கும் இடையில் பிரச்னை இருந்ததாகவும், அப்போது விஷால் கோபமடைந்ததைத் தொடர்ந்து மிஷ்கினும் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறும்போது கோபப் பட்டதாக தெரிவித்தார்.