தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 14, 2019, 7:59 PM IST

ETV Bharat / sitara

ஏழுமலையானைத் தரிசித்து திருமண நாளை கொண்டாடிய ரன்வீர் - தீபிகா ஜோடி!

நடிகர் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதியினர் தங்களின் முதலாமாண்டு திருமண நாளை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

deepika-ranveer-celebrate-wedding-anniversary

வெகு நாட்களாகக் காதலித்து வந்த நடிகர் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இறுதியாக 'பத்மாவத்' திரைப்படத்தில் ஒன்றாக நடித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி இன்று தங்கள் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

இதை முன்னிட்டு இருவரும் ஆந்திர மாநிலம், திருமலை-திருப்பதியில் உள்ள ஏழுமலையான் சந்நிதியில் பிரார்த்தனை செய்து, தங்கள் நாளைத் தொடங்கினர். பாரம்பரிய உடையில் காணப்பட்ட இருவரும், ரசிகர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, 'எங்கள் முதலாமாண்டு திருமண விழாவைக் கொண்டாடும் வேளையில் வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்கள் அனைவரின் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி' என தெரிவித்திருந்தார்.

தீபிகா இன்ஸ்டாகிராம் பதிவு

இதையும் படிங்க: ‘மர்தானி 2’ ட்ரெய்லர் - மீண்டும் வருகிறாள் சிவானி சிவாஜி ராய்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details