தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வண்ணமயமான நினைவுகளை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்! - திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரவி வர்மன்

வண்ணமயமான நினைவுகளை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Cinematographer Ravi Varman
Cinematographer Ravi Varman

By

Published : Jun 5, 2020, 7:22 PM IST

சிறந்த இயக்குநர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல திறமைகளுக்கு சொந்தக்காரர் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், இந்தி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர், தற்போது திரை உலகில் தனது 20 ஆண்டுகள் திரை பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.

மணி ரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, இம்தியாஸ் அலி, பிரியதர்ஷன், ஷங்கர், கௌதம் மேனன், பிரபுதேவா, கேஎஸ் ரவிக்குமார், ராஜீவ் குமார், ஜெயராஜ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். இதுதவிர சுமார் 400க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களிலும் ரவிவர்மன் பணியாற்றியுள்ளார்.

வண்ணமயமான நினைவுகளை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்!

23ஆவது ஈஎம்ஈ சர்வதேச விருது, மாநில விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், ஐஃபா விருதுகள், ஸ்க்ரீன் விருதுகள் பல பெற்ற இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த ‘மாஸ்கோவின் காவேரி’ மூலம் அவர் தன்னை ஒரு எழுத்தாளராகவும், இயக்குனராகவும் மக்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இப்படத்தின் மூலமாகதான் நடிகை சமந்தா, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு பாடலை பகிர்ந்த அக்ஷய் குமார்

ABOUT THE AUTHOR

...view details