வாஷிங்டன்: ஹாலிவுட் நடிகையான கேட் பிளான்செட், கரோனா பீதியால் இங்கிலாந்திலுள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட இருந்தபோது தலையில் காயம் அடைந்தது பற்றி வலையொளி நிகழ்ச்சியொன்றில் விவரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லார்டுடன், வலையொளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை கேட் பிளான்செட். அப்போது கரோனா பீதியால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தபோது செய்த விஷயங்களை பற்றி உரையாடினார்.
அப்போது, “சங்கலி அறுக்கும் இயந்திரத்தை கையாளும்போது தலையில் அடிபட்டு சிறிது காயம் ஏற்பட்டது” என்றார். இதைக்கேட்ட கில்லார்ட், “இதுபோன்ற இயந்திரங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அதுவும் உங்களது தலை என்பது மிகவும் பிரபலமானது” என்று கூறினார்.
இதற்கிடையில், “எனது தோல்பட்டையில் வைத்து இயக்குவதற்கு பதிலாக தவறுதலாக அதை செலுத்தியதால்தான் காயம் ஏற்பட்டது” என்று பதிலளித்தார் பிளான்செட்.