வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. ஆனால், சில காரணங்களால் அப்படம் கை விடப்பட்டதாகவும், விரைவில் புதிய சில மாற்றங்களுடன் அப்படம் தொடங்கும் என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
இப்படத்தில் சிம்புக்குப் பதில் வேறு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்திருந்தார். இந்த வேளையில் 'மகா மாநாடு' என்னும் புதிய படத்தை சிம்புவே இயக்கி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்போது மீண்டும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்றும்; நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், சிம்பு ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்ல முடிவுசெய்திருந்தார். அதன்படி சமீபத்தில் சிம்பு மாலை அணிந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.