தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 11, 2019, 7:32 PM IST

ETV Bharat / sitara

ஓய்வில் தியானம்; கடற்கரையில் நீச்சல் - ஆஷிமா நர்வலின் கோவா ட்ரிப்!

பயணங்கள் எப்போதும் உற்சாமூட்டுபவை. கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என நடிகை ஆஷிமா நர்வல் தெரிவித்துள்ளார்.

Ashima Narwal

தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான படம் 'கொலைகாரன்'. இப்படத்தில் தாரணி - ஆராதனாவாக நடித்தவர் நடிகை ஆஷிமா நர்வல். இவர் தற்போது பிக்பாஸ் புகழ் ஆரவ் உடன் 'ராஜபீமா' என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

தற்போது ஆஷிமா தனது தாயாருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்றார்கள். பயணம் எப்போதும் புதிதாய் கற்றுக்கொள்ள, ஆன்மாவை புதுப்பித்துக்கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. பயணங்கள் எப்போதும் உற்சாமூட்டுபவை.

மனதை ஒருமுகப்படுத்திகொள்வதற்கும், புதிய எண்ணங்கள் மலர்வதற்கும் என்னைப் போன்ற நடிகர் நடிகைகளுக்கு பயணங்களே அற்புத வாய்ப்பு. புத்தம் புது நடனக் கலைகள் கற்க, ஓய்வில் உடலை புதுப்பித்துக் கொள்வதற்கே கோவாவிற்கு வந்துள்ளேன்.

என் அம்மா எனது வாழ்வின் தோழி இப்பயணத்தில் என்னுடன் இணைந்திருந்தார். நாங்கள் பல புதிய இடங்களை கண்டடைந்தோம். பல புது மனிதர்களை சந்தித்தோம். கடல் உணவுகள் பலவற்றை சுவைத்தோம். ஓய்வில் தியானம், கடற்கரையில் நீச்சல், புதிய நடன வகைகளை முயற்சித்தல் என இப்பயணம் இனிமையான அனுபவம். இப்பயணத்தில் நாங்கள் டாட்டுவையும் முயற்சித்தோம்’ என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details