நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான'மாஃபியா'திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதையடுத்து அவரது 30ஆவது படத்தை இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்குகிறர்.
'சினம்' என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடிக்க,முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடிக்கிறார்.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுடைந்துள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது, “சினம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆறு மாதங்கள் இந்த குழுவுடன் பணியாற்றியது மிக சிறப்பாக இருந்தது. படக்குழு கொடுத்த அதரவுக்கு மிக்க நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார். விரைவில் படத்தின் ரீலிஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:'தப்பட்' படத்தின் இரண்டுநாள் வசூலை வெளியிட்ட படக்குழு!