தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2020, 4:58 PM IST

ETV Bharat / sitara

எஸ்பிபியின் மறைவு பேரழிவு - ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான்

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று (செப்.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், " The Voice of Victory, Love, Devotion and Joy!என்று குறிப்பிட்டு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கோச்சடையான் படத்தில் பாடியுள்ள, ’காற்றின் பாடல்கள் என்றும் தீராது” பாடலை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இவரின் இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்றொரு பதிவில், அவருடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்டு, ”பேரழிவு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திருக்குறள் மட்டுமல்ல; எஸ்பிபி குரலும் மனிதர்களின் பொக்கிஷம்!

ABOUT THE AUTHOR

...view details