தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 7, 2021, 12:36 PM IST

ETV Bharat / sitara

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இசைப்புயல்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தான் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இசைப்புயல்
இசைப்புயல்

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாகப் பரவிவந்த கரோனா தொற்று மெள்ளமெள்ள குறைந்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர். அமீனும் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்டனர்.

இசைப்புயல் வெளியிட்ட பதிவு

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை எடுத்துக்கொண்டேன். நீங்க கோவிஷீல்டு போட்டுவிட்டீர்களா?” எனப் பதிவிட்டு அவரது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திடீரென மருத்துவமனைக்குச் சென்ற ஜான்வி கபூர்: ஏன் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details