தேசியவிருது வென்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்(61) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில், மார்ச் 14ஆம் தேதி உயிரிழந்தார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் விஜய்சேதுபதியை வைத்து 'லாபம்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். விஜய் சேதுபதி அவரது மருத்துவ செலவை முழுவதும் ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி இறுதிச்சடங்குவரை கூடவே இருந்தார்.