தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தேனீக்களுக்கு நான் பொறுப்பென்றால்... புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு பொறுப்பு' - ஆண்ட்ரியா படங்கள்

ஊரடங்கால் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தேனீக்களுடன் நடிகை ஆண்ட்ரியா ஒப்பிட்டுள்ளார்.

Andrea
Andrea

By

Published : May 27, 2020, 12:12 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் நான்காம் கட்டமாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நெடுஞ்சாலையில் நடந்து செல்கின்றனர். இவர்கள் வீடு திரும்ப அரசு ஒரு பக்கமும் பிரபலங்கள் சிலரும் உதவி வருகின்றனர்.

இதனையடுத்து ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தேனீக்கள் புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சியானப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "காலை கண் விழித்தபோது, என் ஜன்னலுக்கு வெளியே சில தேனீக்களைக் காண முடிந்தது. வெளியே சென்று பார்த்தபோது என் வீட்டு பால் கனியின் அருகே உள்ள மாமரத்தில் இந்த மிகப்பெரிய தேன் கூட்டைக் கண்டேன்.

நான் தேனீக்களுக்கு எதிரானவள் அல்ல. ஆனால், நான் அவற்றினால் கடிக்கப்படக்கூடாது என்பதற்காக அவற்றை எந்த துன்புறுத்துதலுமின்றி, வேறு இடத்துக்கு மாற்ற சிலரை அழைத்தேன். இறுதியாக, என் முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அவற்றின் மீது பூச்சிக்கொல்லி மருத்து அடித்து, அவற்றைக் கொல்வது. மற்றொன்று அவற்றோடு வாழப்பழகிக் கொள்வது.

எனக்கு பறக்கும் பூச்சிகள் என்றால் பயம் தான். எனினும், நான் பாதுகாப்பாக இருப்பதற்காக ஆயிரக்கணக்கான தேனீக்களை கொல்வதை, என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. இந்த உயிரினங்கள் மீது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில், நம் சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் பங்கு இன்றியமையாதது. தேனீக்கள் அழிந்தால், அடுத்து அழியப்போவது மனிதர்கள் தான்.

இது தேனீக்களைப் பற்றிய கதைதான் என்றாலும்; இது நம் நாட்டில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னை பற்றியதும் தான். என் பால்கனியில் இருக்கும் தேனீக்களுக்கு நான் பொறுப்பென்றால், நம் நாடு முழுவதும் நிர்கதியாகியுள்ள லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தானே பொறுப்பு.

ராணி தேனீ மிகவும் புத்திசாலி. தனது தொழிலாளி தேனீக்கள் இல்லாமல், தான் இல்லை என்பது அதற்குத் தெரியும். தேன் கூடு சிறப்பாக இயங்கவேண்டுமென்றால் தொழிலாளி தேனீக்கள் அதற்கு வேண்டும். தேனீக்களிடமிருந்து மனிதர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காவலர்களுக்கு நன்றி சொன்ன ஆண்ட்ரியா

ABOUT THE AUTHOR

...view details