தமிழ்நாடு

tamil nadu

ரன்வீர் சிங்கின் '83' படத்துக்காக விட்டுக்கொடுத்த அல்லு அர்ஜுனின் 'புஷ்பா'!

By

Published : Oct 4, 2021, 1:22 PM IST

ரன்வீர் சிங்கின் '83' படத்திற்காக அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றிவைக்கப்பட்டுள்ளது.

Allu Arjun
Allu Arjun

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து பாலிவுட்டில் '83' திரைப்படம் உருவாகியுள்ளது.

கபீர் கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துளளனர். 2020ஆம் ஆண்டே இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் நிறைவடைந்து திரை வெளியீட்டுக்குத் தயாரானது. ஆனால் அப்போது கரோனா பரவல் அச்சுறுத்தலால் வெளியீட்டுத் தேதி மாற்றிவைக்கப்பட்டது.

அதன்பின் பலமுறை இப்படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவுசெய்யப்படாமல் இருந்தது. தற்போது '83' படத்தைப் படக்குழுவினர் இந்தாண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியிட முடிவுசெய்துள்ளனர்.

அதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் பொருள்செலவில் உருவாகிவரும் 'புஷ்பா' படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவுசெய்திருந்தது.

அதன்படி 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அப்போது ரன்வீர் சிங்கின் '83'யும் திரைக்கு வருவதால் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் 'புஷ்பா' படக்குழுவினர் '83' வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது டிசம்பர் 17ஆம் தேதி புஷ்பா முதல் பாகத்தை வெளியிட முடிவுசெய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைனில் '83' வெளியிட நாங்கள் தயாராக இல்லை - இயக்குநர் கபீர்கான்

ABOUT THE AUTHOR

...view details