தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2021, 7:44 PM IST

ETV Bharat / sitara

அன்பையும்... வெறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் - நடிகர் அஜித்

திரைத்துறையில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு அன்பான அறிக்கையை அஜித் வெளியிட்டுள்ளார்.

ajith
ajith

கோடிக்கணக்கான ரசிகர்கள், கோடிகளில் சம்பளம் எனத் தற்போது உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். திரைத் துறையில் யாருடைய உதவியுமின்றி வந்து தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அஜித்தின் ஆரம்பகாலம் அடிகளுக்கு உட்பட்டது.

எத்தனையோ அடிகளை வாங்கிய அஜித் 'அமராவதி' படம் மூலம் அறிமுகமானார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து நடித்தார். பல வெற்றி படங்களை கொடுத்தார்.

இந்நிலையில், நேற்று (ஆக.4) அஜித் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை தல ரசிகர்கள் #30YearsOfAjithKumar என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து சமூகவலைதளங்களில் கொண்டாடினர்.

தற்போது 30 ஆண்டுகள் திரையுலகில் நிறைவையொட்டி அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள்.

ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் சார்பற்ற பார்வைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். வாழு வாழ விடு! எதிர்பார்ப்பு இல்லாத அன்பு எப்போதும் அஜித்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 1 கோடி பார்வையாளர்கள்... வலிமையின் சாதனை

ABOUT THE AUTHOR

...view details