தமிழ்நாடு

tamil nadu

கரோனா பீதி: ஏ.ஜி.எஸ் திரையரங்குகள் மூடப்படுகிறது!

கரோனா வைரஸ் காரணமாக ஏ.ஜி.எஸ் திரையரங்கள் அனைத்தும் மூடப்படுகிறது என்று பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 16, 2020, 8:09 PM IST

Published : Mar 16, 2020, 8:09 PM IST

கரோனா பீதி: ஏ.ஜி.எஸ் திரையரங்குகள் மூடப்படுகிறது!
கரோனா பீதி: ஏ.ஜி.எஸ் திரையரங்குகள் மூடப்படுகிறது!

உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, இந்தியவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரோனா வைரஸ் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து ஏ.ஜி.எஸ் திரையரங்குகளும் மூடப்படுவதாக, பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கணபதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், ''கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு அறிவுறுத்தியது போல் அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏ.ஜி.எஸ் திரையரங்குகளும் அரசு அறிவிக்கும்படி மூடப்படுகிறது என்பதை தெளிப்படுத்திக்கிறோம்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மிரட்டும் கரோனா - 19ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details