இந்தியாவில் தற்போது கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிப்படைந்தும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர். பல திரைப்பிரபலங்களும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை சுனைனாவிற்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுனைனா கூறியிருப்பதாவது, "அனைவருக்கும் வணக்கம். மிக கவனமாக இருந்தும் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். அத்தனை விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்.